வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகையை பராமரிக்காவிட்டல் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு லோக்சபா குழு பரிந்துரைத்துள்ளது.
வங்கிகளில் குறைந்த பட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கபப்படுவதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான பரிந்துரை ஒன்றை லோக்சபா குழு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியது,
அதில் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், கூடுதல் இருப்பு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிவார்ட் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















