நாமக்கல் அருகே உள்ள சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பருத்திப்பள்ளி ஊராட்சியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டு சுமார் 100 வீடுகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
சமத்துவபுரம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கிய நாள் முதலே இங்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பல்வேறு துறைகளுக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பலர் வீடுகளை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மீதம் இருப்பவர்களும் வீடுகளை காலி செய்வதற்கு முன்பு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
















