திருப்பூரில் தொண்டையில் ஆப்பிள் சிக்கியதால் மூச்சுவிட திணறிய 9 மாத குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மடத்துக்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் 9 மாத குழந்தைக்கு, அவனது சகோதரர் ஆப்பிள் துண்டை சாப்பிடக் கொடுத்துள்ளார்.
அப்போது குழந்தையின் தொண்டையில் ஆப்பிள் சிக்கியதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் இல்லாததால் பெற்றோர் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தொண்டையில் சிக்கியிருந்த ஆப்பிள் துண்டு, உணவுக் குழாயில் செல்லும் வகையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
















