ஈரான் ஏவுகணை தாக்குதல் : அமெரிக்காவின் E-3 AWACS விமானங்கள் அழிப்பு? - சிறப்பு கட்டுரை!
Jul 19, 2026, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் ஏவுகணை தாக்குதல் : அமெரிக்காவின் E-3 AWACS விமானங்கள் அழிப்பு? – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 1, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் சுமார் 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்காவின் மிக முக்கிய வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான அவாக்ஸ் AWACS விமானம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. ஈரான் போரில் அமெரிக்காவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஒரு மாதத்துக்கு மேலாக தொடரும் ஈரான் போரால், உலக எண்ணெய் மற்றும் எரிபொருள் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் ஈரான் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அந்நாடு மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என்று எச்சரித்திருந்தார்.

இதற்கிடையே சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாகிஸ்தானில் சந்தித்துப் போரை நிறுத்த முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதே வேளையில், மேற்கு ஆசியாவில் ஈரான் மீது தரைவழித் தாக்குதலை நடத்தவும் ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் கைப்பற்றவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் பிரமாண்டமான ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்குப் பதிலடியாக, ஈரானின் அரசு நாளிதழான ‘தி டெஹ்ரான் டைம்ஸின் முதல் பக்கத்தில் “நரகத்துக்கு வரவேற்கிறோம் எனத் தலைப்பிட்டு, ஈரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை எந்தவொரு தரைவழிப்படையும் இல்லாமலேயே அமெரிக்கா தனது போர் இலக்குகளை அடைய முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, சவூதி தலைநகர் ரியாத்தில் இருந்து 96 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தைக் குறிவைத்து ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 29 ட்ரோன்களையும் ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், இந்த விமானப் படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் மிக முக்கிய வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான E-3G Sentry அவாக்ஸ் (AWACS) விமானங்கள் ஆறில் ஒன்று முற்றிலும் உருக்குலைந்தது.

இந்த E-3 அவாக்ஸ் விமானம், ஏவுகணைகள் மற்றும் விமானங்களைக் கண்காணிக்கவும், போர்க்கள நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தப்படும் வான்வழி முன் எச்சரிக்கை விமானமாகும்.

“வானத்தில் அமெரிக்காவின் கண்” என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் மிக முக்கியமான உளவு மற்றும் வழிகாட்டுதல் விமானம் இதுவாகும்.

எரிபொருள் நிரப்பத் தேவைப்படாமலேயே எட்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து வானில் பறக்கும் திறன் கொண்டதாகும்.

இக்காரணங்களினாலேயே, அமெரிக்காவின் வழக்கமான ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற சொத்துக்களில் ஒன்றாக E-3 AWACS விமானம் கருதப்படுகிறது.

1977-ல் உருவாக்கப்பட்ட அவாக்ஸ் AWACS விமானங்கள், ‘Operation Desert Storm’, கொசோவோ போர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள், மற்றும் ‘Operation Inherent Resolve’ என்றழைக்கப்படும் இஸ்லாமிய அரசுக்கு (IS) எதிரானப் போர் எனப் பல முக்கியப் போர்களில் தீர்க்கமானவெற்றியை அமெரிக்காவுக்குப் பெற்று தந்துள்ளது.

இந்த விமானத்தின் உட்புறத்தில் அமைக்கப் பட்டிருக்கும் ரேடார் 375 கிலோமீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்டிருப்பதால் எதிரி நடவடிக்கைகளை குறித்த சூழ்நிலை விழிப்புணர்வையும், ஒரு குறிப்பிட்ட பொறுப்புப் பகுதியின் மீதான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டையும் துல்லியமாக வழங்கிறது.

அமெரிக்க விமானப்படையிடம் தற்போது பதினாறு E-3 Sentry அவாக்ஸ் விமானங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஈரானின் இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வான்வழி கண்காணிப்புத் திறனைப் பெருமளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இத்துடன் KC-135 ரக எரிபொருள் நிரப்பும் பல விமானங்களும் ஈரானின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த 15 அமெரிக்கப் படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு சேதத்தின் அளவு அல்லது உயிரிழப்புகளை உறுதிப்படுத்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா குறிப்பிடத்தக்க ராணுவ இழப்புகளை சந்தித்து வருகிறது. ஈரானின் தாக்குதலில் 12 MQ-9 ரீப்பர் ட்ரோன்களை அமெரிக்கா இழந்துள்ளது. ஒரு அமெரிக்க F-35 ஸ்டெல்த் போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

Tags: iran attackiran attacks us basesAYATOLLAH ALI KHAMENEIiran us bases attackiran attacksayatollah ali khamenei deadiran attack uaeayatollah ali khamenei confirmed deadiran attackedsupreme leader ali khamenei deadiran attack dubaiayatollah ali khamenei deathiran uae attackPrince Sultan Air Basesaudi arabiairan attack on dubaiAWACS aircraftusus attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackus israel iran attack
ShareTweetSendShare
Previous Post

போரை முடித்துக் கொள்ள தயார் : ஹோர்முஸ் ஜலசந்தியை கைவிடும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

Next Post

மேற்காசிய போர் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் – அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Related News

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies