அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
டெல்லியில் தேசிய நகா்ப்புற மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு மாநாட்டில் மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர், ரியல் எஸ்டேட் துறை வளா்ச்சியில் விமான நிலையங்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 50 புதிய விமான நிலையங்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பது, நாட்டின் ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும் எனவும் ராம்மோகன் நாயுடு கூறினார்.
















