பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.
மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் பகுதியில், வரும் மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தலைமையில் NDA சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கான காவல்துறையின் அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி, உரிய விசாரணை செய்து அனுமதி குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, பாஜக மதுரை கோட்டப் பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்க பெருமாள் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது வருகிற திங்கட்கிழமை, பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
















