சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி அரசு விதிமுறைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
பெரியகவுண்டாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வாழப்பாடி வட்டாட்சியர் தொடங்கி வைத்தனர்.
இதில், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேந்த 500 காளைகளும், 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதனிடையே, பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய காவல்துறையினர்,
மாடுபிடி வீரர்களுக்கு விழா குழு வழங்க வேண்டிய டி-சர்ட்டை வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டது.
















