சங்கரன்கோவில் அருகே கணவரை கொலை செய்த குற்றவாளிகள் ஜாமினில் வெளிவந்த தகவலால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரின் கணவர் சங்கரலிங்கம் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்விரோதம் காரணமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
இதில், பலத்த காயமடைந்த சுப்புலட்சுமி, நெல்லை அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார்.
இந்நிலையில், தனது கணவரை கொலை செய்தவர்கள் தற்போது நீதிமன்றம் மூலம் ஜாமினில் வெளிவந்ததாக சுப்புலட்சுமிக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனால் நிலைகுலைந்து போன அவர், மீண்டும் தம்மையும் தனது குடும்பத்தையும் தாக்குவார்களோ என்ற அச்சத்தில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
















