நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவிருந்த கட்சி பொதுக்கூட்டங்கள், திடீரென ரத்தான நிலையில், காங்கிரஸ் குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் மற்றும் வீரவநல்லூரில் நடைபெறவிருந்த திமுக பொதுக்கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்கவிருந்த வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை உடனடியாக வருமாறு கட்சி தலைமை அறிவுறுத்தியதால், அவர் தனது நெல்லை பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு சென்னை கிளம்பினார்.
கடந்த சில நாட்களாக கட்சி பொதுக்கூட்டங்களில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய கருத்துக்கள் பெரும் விவாதத்தை கிளப்பியது.
குறிப்பாக, திமுகவின் கூட்டணி கட்சிகள் குறித்த அவரது விமர்சனங்கள் மற்றும் விரும்பத்தகாத கருத்துக்கள், கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளன.
இது தொடர்பாக புகார்கள் வந்ததால், அமைச்சர் ராஜகண்ணப்பனின் பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
















