கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் மகா சிவராத்திரி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மகா சிவராத்திரியை ஒட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் திரண்டனர்.
பின்னர், ஏழு மலைகளை கடந்து புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள், ஓம் நமசிவாய என முழக்கமிட்டு கோயிலை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர்.
கோயிலில் மகா சிவராத்திரியை ஒட்டி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பக்தர்களின் பாதுகாப்புக்காக வனத்துறை மற்றும் காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















