சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில், ட்ரோன் மூலம் உலகைச் சுற்றி வந்து முருகர் ஞானப்பழத்தைப் பெறுவது போன்ற நாடகம் அரங்கேறியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
அம்பத்தூர் அடுத்த புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இறுதியாக, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி தங்களது மகன்களான விநாயகருக்கும், முருகருக்கும் ‘ஞானப்பழம்’ வழங்கும் திருவிளையாடல் நாடகம் நடைபெற்றது.
அதில் முருகன் வேடமிட்ட மாணவர், ட்ரோன் மூலம் உலகத்தை விரைவாக சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்று விட்டதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த கற்பனை நாடகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
















