டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
கொழும்புவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும், மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக ஆடினார். 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
பின்னர் 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியின் உஸ்மான் கான் 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அதிகாரபூர்வமாக ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதையடுத்து, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். நாடு முழுவ பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், தேசியக் கொடியை ஏந்தி தெருக்களில் நடனமாடியும் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
















