ராகுல் காந்தியின் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி அடிப்படையிலான மானிய பரிமாற்றத் திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் தொடங்கி வைத்தார். பின்னர், காந்தி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய போது, பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவின் அடுத்த கட்டமே இந்தத் திட்டம் என்று குறிப்பிட்ட அமித்ஷா, இதுபோன்ற நவீன திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கான உணவுப் பொருட்கள் நேரடியாகவும், முழுமையாகவும் சென்றடைவதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பற்றி ராகுல்காந்தி பேசுவது தனக்கு சிரிப்பை வரவழைப்பதாகக் கூறிய அவர், விவசாயிகளுக்கு தீங்கு செய்தது யார்? என்று பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா? என்று ராகுல்காந்திக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.
















