கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய நடந்த விழாவில் ஆதியோகி திவ்ய தரிசனம், சத்கருவால் வழங்கப்படும் மகாமந் திர தீட்சை, தியானங்கள், அருளுரை, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நடப்பாண்டு முதல்முறையாக ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஷ்வர லிங்கத்துக்கு ஜக்கி வாசுதேவ் மகா அபிஷேகம் செய்தார். விடியவிடிய நடைபெற்ற பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகை தமன்னா, கிரிக்கெட் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட பிரபலங்களும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு வழிப்ட்டனர்.
















