ஈஷாவில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். மகராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் 32-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஈஷா நிறுவனர் சத்குரு தலைமை வகித்தார். இவ்விழாவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து, ஈஷா சார்பில் கலை மற்றும் பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, இலக்கியம், நாட்டின் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ‘பவ்ய பாரத் பூஷன்’ விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு விருது வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, உரையாற்றிய அவர், இந்த மகா சிவராத்திரி திருநாளில், இந்த தேசம் முழுவதும், ஹரஹர மகாதேவ் என்ற முழுக்கம் எதிரொலிப்பதாக கூறினார். மேலும், ஈஷா யோக மையம் நடத்தும் இந்த விழா சர்வதேச அளவிலான ஆன்மிக கொண்டாட்டமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்த அவர், நாட்டின் உண்மையான பாதுகாப்பு வலிமை மிக்க தேசிய உணர்வில் இருந்து வருகிறது என்றார்.
















