கள்ளை மத்திய அரசு உணவுப் பட்டியலில் சேர்த்தும், அதனை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் என தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையம் பகுதியை சேர்ந்த பனையேறும் தொழிலாளி துரைராஜை, கள் இறக்குவதாகக் கூறி கைது செய்த போலீசார்,
அவரிடமிருந்து 10 லிட்டர் பதநீரை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பனையேறிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், துரைராஜ் மீது பொய் வழக்கு போடுவதாகக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
















