நாமக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம் சேதமடைந்தது.
நாமக்கல் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், தரம்பிரிக்கப்பட்டு கொசவம்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.
இந்நிலையில், அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டு, அனைத்து இடங்களுக்கும் பரவியது.
இதனால் அங்கிருந்த பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முழுவதுமாக அணைத்தனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
















