டெல்லியில் ஐந்து நாள் சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஏஐ மாநாடு கடந்த 2023ம் ஆண்டு பிரிட்டனின் பக்கிங்காமில் நடைபெற்றது. 2024-ல் தென்கொரியாவின் தலைநகர் சியோலிலும், 2025-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் நடைபெற்றது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான ஏஐ உச்சி மாநாட்டை இந்தியா ஏற்று நடத்தி வருகிறது.
அதன்படி, பாரத் மண்டபத்தில் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
மக்கள், பூமி, முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில் ஏழு கருப்பொருள்கள் அடங்கியுள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபா் லூலா டாசில்வா உள்பட 45 நாடுகளின் அமைச்சக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.
கூகுள் CEO சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ CEO சாம் ஆல்ட்மேன், மைக்ரோசாஃப்ட் துணை தலைவர் பிராட் ஸ்மித் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
















