சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் - 7 நாட்கள் கெடு விதித்த பலூச் ராணுவம்!
Sep 2, 2026, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் – 7 நாட்கள் கெடு விதித்த பலூச் ராணுவம்!

Manikandan by Manikandan
Feb 17, 2026, 09:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறைப்பிடிக்கப்பட்ட 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை விடுவிப்பதற்கு ஒரு வாரம் காலக்கெடு விதித்துள்ள பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் சிறையில் உள்ள பலூச் கைதிகளை விடுதலை என்ற செய்யவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். மேலும் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் கொன்று விடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த இரண்டாம் கட்ட (Operation Herof) ஆபரேஷன் ஹெரோப் நடவடிக்கையில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் பலூச் விடுதலை இராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது.

பெண் தற்கொலைப் படை வீரர்களும் இந்த தாக்குதலில் ஈடுட்டதாக பலூச் விடுதலை இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.

50க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட இந்த தாக்குதலின் போது ​​பலூச் விடுதலை இராணுவத்தினர் பாகிஸ்தான் இராணுவ வீரர்களைக் கைது செய்தனர்.

முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, சிறைப்படிக்கப் பட்ட 17 பாகிஸ்தான் இராணுவ வீரர்களில் பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த 10 பேர் கடும் எச்சரிக்கைக்குப் பிறகு விடுவிக்கப் பட்டுள்ளனர்.

பலூச் தேசிய நீதிமன்றத்தில் முறையாக நடைபெற்ற விசாரணையில் ​​காவலில் உள்ள 7 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது போர்க்குற்றங்கள், பொதுமக்களுக்கு எதிரான வன்முறை செயல்கள், பலூச் மக்களைக் கட்டாயமாக காணாமல் போகச் செய்வது உட்பட பலூச் மக்கள் இனப்படுகொலையில் தீவிரமாக பங்கேற்றது ஆகிய குற்றசாட்டுகள் ஆதாரங்களுடன் வைக்கப்பட்டன.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தங்கள் தரப்பு கருத்துக்களை கூற வாய்ப்பும் வழங்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.

விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்ட 7 பாகிஸ்தான் இராணுவ வீரர்களையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், பலூச் விடுதலை ராணுவத்தின் கட்டளை கவுன்சில், சர்வதேச போர் விதிமுறைகள் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வது தொடர்பான நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி பாகிஸ்தானுக்கு ஏழு நாள் கருணை காலக்கெடுவை வழங்க முடிவு செய்துள்ளது.

7 நாட்கள் காலக் கெடு காலத்தில், ஏழு இராணுவ வீரர்களையும் பலூச் போர்க் கைதிகளை விடுவிப்பதற்காக பரிமாறிக் கொள்ளலாம் என்றும் பலூச் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பலூச் விடுதலை இராணுவ அமைப்பின் ஊடகப் பிரிவான ஹக்கல் ஒரு வீடியோ செய்தியுடன் இறுதி எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

பலூச் போர்க் கைதிகளை ஒப்படைக்காவிட்டால்,பலூச் தேசிய நீதிமன்றத்தின் உத்தரவின் படி, 7 பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் பலூச் விடுதலை இராணுவம் உறுதிபட தெரிவித்துள்ளது.

கெடு விதித்து ஒரு நாள் முடிந்துள்ள நிலையில், இது குறித்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

சொந்த வீரர்களின் உயிரைப் பாதுகாக்க உடனடி தீர்வு நடவடிக்கையை எடுக்கப்போகிறதா ? அல்லது வழக்கம் போல் மௌனத்தையும் அலட்சியத்தையும் கடைப்பிடிப்பதன் மூலம் தனது வீரர்களின் மரணத்துக்கு ஒப்புதல் அளிக்கப் போகிறதா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Tags: BLA ISSUEpakistanpakistan armyOperation HerofBLABaloch Army
Share
Tweet
SendShare
Previous Post

மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும் – டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக கடும் எச்சரிக்கை!

Next Post

சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies