கோவை அரசு மருத்துவமனை அருகே உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள வளாகத்தில் இரவு நேரத்தில் ஏராளமானோர் உறங்குவது வழக்கம்.
இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள், அப்பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உறங்கி கொண்டிருந்தவர்களை, அங்கிருந்து செல்லும்படி ஊழியர்கள் கூறியதாகவும் ஆனால் அவர்கள் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் மாநகராட்சி ஊழியர்கள், அவர்கள் மீது பைப் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர்.
மாநகராட்சி ஊழியர்களின் இச்செயல் மனிதாபிமானமற்றது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
















