திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், தமிழக மக்களை இருண்ட பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை கொரட்டூரில் சக்தி கேந்திரம் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்,.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கான எந்த நலத்திட்டங்களும் இடம் பெறவில்லை எனவும் தொலைநோக்கு பார்வையுடன் பட்ஜெட் தயாரிக்கப்படவில்லை எனவும் கூறினார்
















