வலிமையான ராணுவத்தை கொண்ட நாடு கூட மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறு உள்ளது உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை எச்சரித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 47 ஆண்டுகளாக ஈரானை தாக்க முடியவில்லை என ட்ரம்ப் கூறியுள்ளதாகவும், இது சிறந்த ஒப்புதல் வாக்குமூலம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகிலேயே வலிமையான ராணுவத்தை வைத்துள்ளதாக ட்ரம்ப கூறி வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்த வலிமையான படைகூட சில நேரங்களில் கடுமையாகத் தாக்கப்படலாம் என எச்சரித்துள்ளார்.
ஈரானை நோக்கி அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்த கமேனி, அந்த போர்க்கப்பலை கடலுக்குள் அனுப்பும் வகையிலான சக்தி வாய்ந்த ஆயுதங்கள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
















