தவெகவில் போட்டி போட்டு விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றவர்களில், பெரும்பாலானோர் மனுவை பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்காக கடந்த 6ம் தேதி தவெக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. சுமார் 50 ஆயிரம் பேர் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர். பெறப்பட்ட விருப்ப மனுக்களை திரும்ப ஒப்படைக்க வரும் 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலானோர் விருப்ப மனுக்களை திரும்ப ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பூர்த்தி செய்து கொடுக்கும்போது பொதுப் பிரிவினர் 10 ஆயிரம் ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் 5 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் விருப்ப மனுவை ஒப்படைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
















