ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை இயல்பானது எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கியதில் இருந்தே ஆட்சி அதிகாரம் என்பது தங்களது கோரிக்கையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்துவிடக் கூடாது என்பதற்காக அந்த கோரிக்கைக்கு தாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை எனக்கூறிய திருமாவளவன், அதேசமயம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை தாங்கள் கைவிடவில்லை என்றும் தெரிவித்தார்.
















