திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை எனக்கூறி, நெல்லையை சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த வின்சென்ட் வினோத் என்பவர், திமுக மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் அவர், கட்சியில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை எனக்கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
திமுகவில் மூத்த நிர்வாகி ஒருவர், உரிய அங்கீகாரம் இல்லை எனக்கூறி பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
















