புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி, AIAT நிறுவன முதல்வர் சஞ்சீவ் ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் கௌரவ் மிஸ்ரா, மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
திரைப்படங்களில் காட்டப்படும் ராணுவ காட்சிகள் வெறும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமே என்றும், நிஜத்தில் அதனையும் தாண்டி பல உண்மை நிலவரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி தேசப்பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
















