ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், சாலையில் தேங்கிய பனியை அகற்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க முகலாய சாலை, பிர் பஞ்சால் மலைத்தொடர் வழியாகச் சென்று, காஷ்மீர் பள்ளத்தாக்கை பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களுடன் இணைக்கிறது.
இப்பகுதிகளில் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருவதால் சாலைகளில் மலைபோல் பனி குவிந்துள்ளது.
இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, சாலையில் தேங்கிய பனியை, ராட்சத இயந்திரங்களைக் கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
















