டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்ட சதிக்கு மூளையாக செயல்பட்டது ராகுல்காந்திதான் எனும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது இல்லத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஏஐ மாநாட்டிற்கு திட்டம் தீட்டிக் கொடுத்தது ராகுல்காந்திதான் என மத்திய அமைச்சர்களும், பாஜக நிர்வாகிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராகுல்காந்தியின் வீட்டை பாஜகவின் இளைஞரணி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரசின் அநாகரிக செயல்களுக்கும், ராகுல்காந்திக்கும் கடுமையாக எச்சரிக்கை விடுத்த அவர்கள், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக போலீசார் அவர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.
















