கொலம்பியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 17 டன் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொலம்பியா நாட்டின் பாதுகாப்புப் படைகள், சர்வதேச உளவு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் 17 டன் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மெக்சிகோ, பிரான்ஸ், எல்.சால்வடார் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியால் இந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய கொலம்பியா அதிபர் பெட்ரோ, சர்வதேச ஒத்துழைப்பு இருந்தால் போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்களை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பதற்கு இதுவொரு சான்று என்று தெரிவித்தார்.
















