ஈரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாததால், தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
மாநகராட்சியின் 20வது வார்டில், கழிவுநீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், நீரோட்டம் தடைப்பட்டு மீண்டும் வீடுகளுக்குள்ளே கழிவுநீர் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக மாநகராட்சியிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
















