கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு பதவி வழங்குவதில் சாதிய பாகுபாடு உள்ளதாக அக்கட்சியினரே குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திமுகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் தளபதி முருகேசன் தனிச்சையாக செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், கட்சியில் பதவி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அக்கட்சியினரே குற்றம்சாட்டி வருகின்றனர்.
அந்த வகையில் திருமலையாம்பாளையத்தில் திமுக சார்பில் 15 கிளை கழகச் செயலாளர்கள் உள்ள நிலையில், இவர்களுக்கு தெரியாமலேயே புதிய பேரூர் கழக செயலாளரை நியமித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிளை கழகத்தினர் தங்களை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
15 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் தாங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், சாதிய பாகுபாடோடு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் செயல்பட்டு வருவதாகவும் திமுக கவுன்சிலர் ரமேஷ்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
















