அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து, அமைச்சர் முத்துச்சாமியின் தொகுதியான ஈரோடு மேற்கு தொகுதியை சேர்ந்த மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அடுத்த கவுண்டச்சிபாளையம் புதுவலசு பகுதிக்கு உட்பட்ட சக்தி நகர், நாகம்மா நகர், சரவணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்றும், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறி, ஈரோடு சென்னிமலை சாலையில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.
















