பாலியல் தொந்தரவு புகாரில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த கமாண்டண்ட் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவைபுதூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவர் மீது பாலியல் தொந்தரவு குறித்த புகார்கள் எழுந்தன.
பயிற்சிக்கு சேர்ந்த பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விசாரணையின் முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
















