திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மதுபான விற்பனை குறித்து பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, புள்ளி விவரத்துடன் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
போளூர் அடுத்த களம்பூர் பகுதியில் “சிங்கப் பெண்ணே எழுந்து வா – தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்“ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய சௌமியா அன்புமணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 206 மதுக்கடைகள் உள்ளதாகவும், ஆண்டு வருமானம் 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் வரை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பால், மின்சாரம், போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது குறித்தும் செளமியா அன்புமணி சுட்டிக்காட்டினார்.
















