அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 15 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டிய டிரம்ப், 2025 ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். இந்த சூழலில், டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டது.
டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இனி 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக இனி புதிய 10 சதவிகித வரிகளை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், 10 சதவிகித வரி விகிதத்தை 15 சதவிகிதமாக உயர்த்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். புதிய 15 சதவிகித வரி விதிப்பானது நாளை மறுநாள் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது 15 % வரி
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 % வரி
ஒரே நாளுக்குள் வரி விதிப்பை10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்திய ட்ரம்ப்
அமெரிக்க நீதிமன்ற தடைக்கு பின்னர் 10 சதவீத வரி விதிப்பை ட்ரம்ப் அறிவித்தார்
















