போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழகத்தில் போதை பழக்கத்தை தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக இளைஞர் அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி. சூர்யா, முன்னாள் அமைச்சர் செந்தமிழன், இளைஞர் அணி மாநில செயலாளர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேபோல், கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
பாஜக மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி, மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக OBC அணி மாநில செயற்குழு உறுப்பினர் காசி மகேஸ்வரன், மாநில பிரச்சார பிரிவு தலைவர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஏராளமான NDA கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டார். இதேபோல், திருவாரூர் மாவட்டம் லஷ்மாங்குடி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
















