திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலினுக்காக பொது வழிபாடு நிறுத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் வருகை தந்தார்.
அப்போது அவரை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
தொடர்ந்து அவர் கோயிலில் வழிபாடு நடத்தினார். முன்னதாக துர்கா ஸ்டாலின் வருகைக்காக பொது தரிசனம் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
















