திருப்பூரில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகூர்த்த நாளையொட்டி வெளியூர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனர்.
அப்போது நீண்ட நேரமாகியும் மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் நிகழ்ச்சிக்காக பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டதாக பயணிகள் குற்றஞ்சாட்டி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















