வங்கிகள், சேமிப்பு, கடன்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கிகள், கமிஷன் வருமானத்திற்காக இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட் விற்பனையில் அதிக முனைப்பு காட்டுவதை நிறுத்திவிட்டு, சேமிப்பு, கடன்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் தவறான விற்பனை தற்போது குற்றமாக கருதப்படுவதாகக் கூறிய அவர், வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்களைக் காப்பீடு வாங்க வற்புறுத்துவது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
அண்மையில் ரிசர்வ் வங்கி தவறான விற்பனை குறித்த வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு வழகாட்டுதல்கள்படி, தவறான விற்பனை நிரூபிக்கப்பட்டால், தயாரிப்பு அல்லது சேவை வாங்குவதற்காக வாடிக்கையாளர் செலுத்திய முழுத் தொகையையும் வங்கிகள் திருப்பிரத்தர வேண்டும் என்றும், தவறான விற்பனையால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்பை வங்கிகள் தான் ஈடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















