குடியரசுத் தலைவர் மாளிகையில் தமிழகத்தை சேர்ந்தவரும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ராஜாஜியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் ஆங்கிலேயா் புகழ் போற்றும் அடையாளங்கள், சின்னங்கள் மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டு சுதந்திர இந்தியாவில் பெரிதும் பங்களிப்பு செய்த தலைவர்கள், தியாகிகள் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், டெல்லியில் முக்கிய அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ள செளத் பிளாக், நாா்த் பிளாக் உள்ளிட்டவற்றை கட்டிய பிரிட்டிஷ் கட்டடக் கலைஞா் எட்வின் லூட்யன் சிலை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடைசி கவர்னர் ஜெனரலாகவும், சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாகவும் இருந்த ராஜாஜியின் சிலை அங்கு நிறுவப்பட்டது.
கோலாகலமாக நடைபெற்ற சிலை திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு ராஜாஜியின் சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















