இந்து ராஷ்டிரம் என்பது மத அரசு அல்ல; தர்ம ராஷ்டிரம் என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே விளக்கம் அளித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் ப்ளூமிங் பாரத்- இளம் அறிவுஜீவிகள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கலந்து கொண்டார்.
அப்போது உரையாற்றிய அவர், பாரதம் என்பது 1947 ஆம் ஆண்டில் பிறந்த புதிய தேசம் அல்ல எனவும் அது ஒரு பண்டைய ராஷ்டிரம் என தெரிவித்தார். ஆன்மிகத்தை ஆன்மாவாக கொண்ட இந்த நிலத்தின் நாகரிகத் தன்மை, பிரிட்டிஷ் ஆட்சியின்போது கூட இந்து ராஷ்டிரம் ஆகவே இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீன ஆக்கிரமிப்பின் போது இமயமலையை சிவனின் இருப்பிடம் என மாநிலங்களவையில் அண்ணாதுரை பேசியதையும், பாரதத்தை ஒருங்கிணைப்பதில் புனித பயணங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக மதுரையில் முன்னாள் பிரதமர் நேரு பேசியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
மொழி மனிதகுலத்தின் மிகப்பெரிய சொத்து எனக் கூறிய தத்தாத்ரேயா ஹோசபாலே, அதை அரசியல்மயம் ஆக்குவதாகவும் பிரிவினைக்கான கருவியாக பயன்படுத்தாகவும் குற்றம்சாட்டினார்.
இந்து ராஷ்டிரம் என்பது மத அரசு அல்ல; அது ஒரு தர்ம ராஷ்டிரம் எனவும் அவர் விளக்கம் அளித்தார்…
















