சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது இன்றியமையாதது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
RSS-ன் நூறாவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் உத்தராகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மோகன் பாகவத், உத்தராகண்டில் பொதுசிவில் சட்டம் செயல்படுத்தப்பட்டது போன்று, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உத்தராகண்ட் சட்டவரைவு தயாரிக்கப்பட்டபோது சுமார் மூன்று லட்சம் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய வெளிப்படையான கலந்தாலோசனை தேசிய அளவிலும் அவசியம் என கூறினார்.
எந்த வெளிப்புற வளங்களும் இல்லாமல் நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம், இரண்டு முறை கடுமையான தடைகளை எதிர்கொண்ட போதிலும் சமூகம் அளித்த தன்னம்பிக்கையின் பலத்தில் தொடர்ந்து முன்னேறி வருவதாக மோகன் பாகவத் தெரிவித்தார்.
















