ஹரியானா மாநிலம் குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ஸ்கை ஏர்’ நிறுவனம், ட்ரோன்கள் மற்றும் AI ரோபோக்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பொருட்களை டெலிவரி செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு அவசரகால உதவிகளுக்கு ட்ரோன்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக உணவு, அத்தியாவசிய மருந்துகள் போன்றவை டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் குருகிராமை தைலைமையிடமாக கொண்ட ஸ்கை ஏர் நிறுவனம் ட்ரோன்கள் மற்றும் AI ரோபோக்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பொருட்களை டெலிவரி செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது.
அவசர மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் சிறிய பார்சல்கள் இந்தச் சேவையின் மூலம் வழங்கப்படுகின்றன. ஜிபிஎஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் ரோபோக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குறுகலான வீதிகளிலும் துல்லியமாகப் பொருட்களைச் சேர்க்கின்றன.
சாலைப் போக்குவரத்தைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லாததால், மிகக் குறுகிய நேரத்தில் டெலிவரி செய்யப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் நேரத்தை மிச்சப்படுத்தவும், மனித உழைப்பைக் குறைக்கவும் இந்த ட்ரோன்-ரோபோ கூட்டணி உதவும் என ஸ்கை ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் காலங்களில் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்தச் சேவையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
















