திருநீர்மலை ஏரியை சீரமைப்பதில் புதிய சர்ச்சை...தூர்வாரும் பணியில் முறைகேடா? -கேள்வி எழுப்பும் மக்கள்
Mar 15, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநீர்மலை ஏரியை சீரமைப்பதில் புதிய சர்ச்சை…தூர்வாரும் பணியில் முறைகேடா? -கேள்வி எழுப்பும் மக்கள்

Manikandan by Manikandan
Feb 25, 2026, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அருகே திருநீர்மலை பெரிய ஏரியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளின் போது, தூர்வார்தல் என்ற பெயரில் அதிகளவு மணல் அகற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்த இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை தேவை எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநீர்மலை பெரிய ஏரியில் நடைபெறும் சீரமைப்பு பணிகள், தற்போது பல புதிய சர்ச்சைகளை உருவாகியுள்ளன. ஏரியை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தூர்வாருவதாகக் கூறி அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஒருகாலத்தில் சுமார் 194 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த நீர்நிலை, தற்போது சுமார் 100 ஏக்கராகச் சுருங்கியுள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் இருந்த ஏரியை சீரமைக்க, 5.15 கோடி ரூபாய் அளவிற்கு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டிய நிலையில், அடுத்தகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், ஏரிக்குள் தேங்கிய மணலை அகற்றும் பணிகள் சீரமைப்பு பணிகளை விட அதிக வேகமாக நடைபெற்று வருவதும், லாரிகளில் மணல் வெளியேற்றப்பட்டு வருவதும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சீரமைப்பு பணிகள் தாமதமாக தொடங்கியதும், முழுமையான திட்டமிடல் இல்லாமையும், ஏரியின் நீர்ப்பிடிப்பு திறனை பாதிக்கக்கூடும் என நீர்நிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சம்மந்தப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையம் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ, எம்.பி போன்ற மக்கள் பிரதிநிதிகள், இத்தகைய சுரண்டலை ஏன் கவனிக்கவில்லை என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதன் காரணமாக சம்மந்தப்பட்ட பிரதிநிதிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீர் மேலாண்மை சரியாக மேற்கொள்ளப்படாவிட்டால், வரும் கோடைக் காலத்தில் நீர்வள ஆதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சூழலில் பொதுமக்கள் நிதியில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரி சீரமைப்பு என்ற பொதுநலத் திட்டம், தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கனிமவள மேலாண்மை குறித்த முக்கிய விவாதமாக மாறியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ விளக்கம் மற்றும் கண்காணிப்பு அவசியம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

Tags: removedcarriedThirunirmalai lakeChennaiallegationssand
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக ஆணை – நீதிமன்றம் உத்தரவு!

Next Post

இபிஎஸ் முதலமைச்சராக வேண்டி அதிமுகவினர் பாதயாத்திரை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies