மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கள்ளழகர் படம் வரையப்பட்டது.
மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புதிய மேம்பாலத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி திறந்து வைத்தார்.
தமுக்கம் மைதானம் பகுதியில் பாலத்தின் ஒரு புறத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வது போன்ற ஓவியம் வரையப்பட்டிருந்தது. அதில் தங்க குதிரையில் கள்ளழகர் படம் வரையப்படாமல் அந்த இடத்தில் சூரியன் ஒளிர்வது போன்று படம் இருந்தது. இதற்கு மதுரை மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக இந்து முன்னணியினர் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்க சென்றனர்.
அப்போது மாநகராட்சி ஆணையர் புகாரை வாங்க மறுத்து அவமதித்ததாக இந்து முன்னணியினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொளியாக , தமுக்கம் மைதானம் பகுதியில் வரையப்பட்டிருந்த ஓவியத்தில் கள்ளழகர் படம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
















