காவலர் தேர்வில் சர்ச்சைக்குரிய 3 கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில், காலியாக உள்ள 3 ஆயிரத்து 644 இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவம்பர் 9ம் தேதி நடைபெற்றது.
வினாக்களுக்கான விடை குறிப்பை நவம்பர் 14ம் தேதி வாரியம் வெளியிட்டது. விடை குறிப்பை சரிபார்த்ததில் 3 கேள்விகளுக்கு தவறான பதில்கள் இடம்பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து அதற்கு உரிய மதிப்பெண்களை வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது 3 கேள்விகளுக்கான மதிப்பெண்களை வழங்க தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
















