ஈரோட்டில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரின் மகனையும் பாதிக்கப்பட்டவர்களையும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பஞ்சாயத்து செய்த திமுக நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலர் மோகனாவின் மகன் கதிர் என்பவர், கடந்த 2024 ஆம் ஆண்டு வளையக்கார வீதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் நாகரத்தினத்தின் அறையில், அவரது கணவரும் திமுக மாநகர செயலாளருமான சுப்பிரமணியன் என்பவர், மோசடியில் ஈடுபட்ட கதிர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து பஞ்சாயத்து செய்துள்ளார்.
இதில் திமுக கவுன்சிலரின் மகன் கதிர் சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணத்தை திருப்பி தர சம்மதித்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசு அலுவலகத்தில் மக்கள் பிரதிநிதியான மேயர் அறையில், அவரது கணவரும் திமுக நிர்வாகியுமான சுப்பிரமணியன் இப்படி அத்துமீறி செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
















