கொல்கத்தாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஹைதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற இரயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு இரயில்கள், விரைவு இரயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு வரும், பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்கள் தலைமையிலான மத்திய அரசிற்கும், மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்
மேலும் தமிழகத்தின் பெண்ணாடம் மற்றும் கடம்பூர் போன்ற இரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்ற இரண்டு விரைவு இரயில்கள், குறிப்பிட்ட இரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டுமென்கிற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை, சமீபத்தில் மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன் எனவும்
தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நமது மத்திய இரயில்வே அமைச்சகம், சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி இடையிலான விரைவு இரயில் பெண்ணாடம் இரயில் நிலையத்திலும், தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு இரயில் கடம்பூர் இரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்கிற அறிவிப்பை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்
இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களின், பொது போக்குவரத்து மற்றும் தொழில் சார்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த அறிவிப்பு நிவர்த்தி செய்யும். இதற்காக தமிழக மக்கள் சார்பில், பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கும், மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மத்திய அமைச்சர் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
















