இந்திய நிலப்பரப்பை சட்டவிரோதமான முறையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது என ஐநா சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது,
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் கடந்த 23-ம் தேதியில் இருந்து மார்ச் 31-ம் தேதி வரை ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 61-வது கூட்டம் நடக்கிறது.
இந்த உயர்மட்ட கூட்டத்தில், ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி அனுபமா சிங் பேசினார். அப்போது , இந்திய விடுதலை சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி, 1947-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்த காஷ்மீர் பகுதியானது முற்றிலும் சட்டப்பூர்வமானது மற்றும் மாற்ற முடியாதது என கூறினார்.
மேலும், இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதியை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
















