சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
















